×

திண்டிவனம் அருகே மரத்தில் கார் மோதி விபத்து: ரயில்வே அதிகாரி, சாப்ட்வேர் இன்ஜினியர் உட்பட 4 பேர் பலி

திண்டிவனம்: சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அடுத்த தலவாய்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் குருநாதன்(54), செந்தில்நாதன் (50). குருநாதன், சென்னை ரயில்வேயில் வேலை செய்து வந்தார். செந்தில்நாதன், சென்னையில் சாப்ட்வேர் இன்ஜினியராக தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். செந்தில்நாதன் மனைவி இந்துமதி (40), சென்னை சேப்பாக்கத்தில் வேளாண் அலுவலராக இருந்து வந்தார். செந்தில்நாதன் மகன் முகில்(16).  இவர்கள் சென்னை மேடவாக்கத்தில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், கள்ளக்குறிச்சியில் உறவினரின் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள 4 பேரும், நேற்று முன்தினம் காரில் சென்றுள்ளனர். காரை செந்தில்நாதன் ஓட்டினார். திருமண நிகழ்ச்சி முடிந்து மீண்டும் சென்னைக்கு செல்வதற்காக நேற்று காலையில் ஒரே காரில் 4 பேர் சென்னைக்கு திரும்பி கொண்டு இருந்தனர். திண்டிவனம் அருகே பாதிரி என்ற இடத்தில் சென்றபோது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதியது. இதில் குருநாதன், செந்தில்நாதன், இந்துமதி, முகிலன் ஆகிய 4 பேரும் இறந்தனர். தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஒலக்கூர் போலீசார் மற்றும் திண்டிவனம் தீயணைப்பு வீரர்கள் சென்று உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். …

The post திண்டிவனம் அருகே மரத்தில் கார் மோதி விபத்து: ரயில்வே அதிகாரி, சாப்ட்வேர் இன்ஜினியர் உட்பட 4 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Thindivanam ,Salem district ,Betanayakanbalayam ,Thalavayapatti ,Kurunathan ,Senthilnathan ,Chennai ,Kindivanam ,
× RELATED சேலம் மாவட்ட பாஜ தலைவர் மீது பெண்...